Monday, March 1, 2010

ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம்

ம்ம்ம்ம்...இந்த படம் பார்த்து கவலை தான் ஏற்பட்டது. இப்படியா சோழர் வம்சத்தையும், பாண்டிய வம்சத்தையும் கேவலப்படுத்துவது என்று.!!

இது போதாதென்று பல ஆங்கிலப்படங்களைக் கலந்து விட்டிருப்பது.

Indiana Jones, Apocolypto, Gladiator, 300, National Treasure, mummy(புதையல் தேடிச் செல்வது),Jurassic Park 3 எல்லாம் கலந்த கலவை தான் ”ஆயிரத்தில் ஒருவன்”.

பலக் காட்சிகள் திருடப்பட்டவை. முதல் சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கில் ஆதிவாசிகளின் அம்புகள் வந்து விழுவது 300 படத்திலிருந்து சுட்டது. அதே போல் கடைசி சண்டைக்காட்சிகளில் வீரர்கள் கேடயத்தை முன்னால் நிறுத்தி துப்பாக்கிக் குண்டுகளை தடுக்கும் concept 300 படத்திலிருந்து சுட்டது தான்.. ஒரு சின்ன வித்தியாசம் 300 படத்தில் அம்புகள் பாய்ந்து வரும், இதில் துப்பாக்கிக் குண்டுகள் Because this is happening in 2009. :)

அந்த மைதானத்தில் குண்டு அரக்கன் கல்லெறியும் காட்சி Gladiator படத்தில் நடக்கும் மைதான சண்டைக்காட்சி...இதிலும் ஒரு வித்தியாசம்..Gladiator-ல் மைதானத்தில் தள்ளப்பட்ட கைதிகள் அனைவரும் ராஜாவின் படையை எதிர்த்து சண்டை போடுவார்கள்.... இதில் பைத்தியம் மாதிரி நடித்து அல்லது நடிப்பதாய் நினைத்துக் கொண்டு அடி வாங்கி சாகிறார்கள்... ம்ம்ம் இந்த மாதிரி படத்தில் நடித்தால் கடைசியில் சாகத்தான் வேண்டும்.

பாவம் பிரதாப் போத்தன், இந்த படத்தை ஒப்புக் கொண்ட பாவத்திற்கு பைத்தியம் ஆகி கல்லால் முட்டியில் அடி வாங்கியது தான் மிச்சம்.

Jurassic Park-3-ல் காணாமல் போன பையனைத் தேடி அவனது பெற்றோர் ஒரு தீவுக்குப் போகும் போது அவனுடைய Handy Cam-ஐ ஒரு மரத்தில் இருந்து எடுப்பார்கள், அதே போல் இதில் ஆண்ட்ரியா, பிரதாப் போத்தனின் Handy Cam-ஐ எடுக்கிறார்.

இடையில், ரீமாசென்னின் private security கேட்டவுடனே Flight-ல weapons இறங்குது. அதுவும் எல்லாம் மினிஸ்டர் அனுப்பி வைக்கிற அரசு விமானங்களில்..!! அநியாயத்திற்கு லாஜிக் மீறல்கள்...

இடையில் ஒரு பாட்டு வேற...அப்புறம் குகைக்குள்ள ஆண்ட்ரியா, ரீமாசென் ஹீரோ கார்த்திக்கை கட்டிபுடிச்சுட்டு தூங்குற மசாலா தூவல். அங்கங்கே

ரிமாசென்னைக் கவர்ச்சி காட்டி படத்தை ஒட்டிருக்காங்க வேற...

இனி உச்சகட்டமாக சோழரையும், பாண்டியரையும் மானபங்கம் படுத்தியது. :-(
ரீமாசென்னுக்கு அவருடைய அம்மாவே உடம்பைப் பயன்படுத்தி எதிரியை மயக்க சொல்லித்தருவதாக சொல்வது. அதன்படி பாண்டிய வம்சத்துப் பெண்களை இழிவுபடுத்துவது போல் உள்ளது. உண்மையில் பாண்டிய மன்னர்கள் எதிரியை வீழ்த்த வீரத்தைத் தான் பயன்படுத்தி இருப்பார்கள் என்று எனது நம்பிக்கை. கடைசியில் ரீமாசென் அந்த குலதெய்வச் சிலையை எடுத்து வந்தாரா என்று கூட பார்க்கவில்லை.

அப்புறம் சோழர்கள்... எனக்குத் தெரிந்த மிகச்சிறிய வரலாற்று அறிவில் சோழர்கள் மிகவும் நாகரீகமானவர்கள், கலை அறிவு மிக்கவர்கள் (தஞ்சைப் பெரிய கோவிலே இதற்கு ஒரு சாட்சி) மற்றும் வீரமானவர்கள்,

 அவர்களை இப்படி காட்டுமிராண்டிகள் போல் கருப்பாய் காண்பிப்பது, ஒரு சோழர் பெண் அவளுடைய மார்பை பார்த்திபனிடம் அழுத்திக் காட்டி பார்த்திபனிடம் உணவு கேட்பது இதிலேயே செல்வராகவனின் கொடூரமான மனது புரிகிறது.

இதில் பார்த்திபனுடைய மனைவி மட்டும் சிவப்பாக இருக்கிறார்(அது சரி கடைசியில் கற்பழிப்புக் காட்சிக்கு உதவுமே), பார்த்திபன் மாநிறம், ஆனால் அவர்களது குழந்தை அட்டைக் கருப்பு, இது என்ன லாஜிக்கோ...

முதலில் மந்திர வேலைகள் காட்டும் பார்த்திபன் கடைசியில் ரீமாசென் ஏமாற்றியது தெரிந்த பிறகு போருக்கு முன்னரே கழுத்தை அறுத்துக் கொள்ள முயற்சிப்பது சோழன் ஒரு கோழை என்று காட்டுவது போல் இருந்தது. அவருக்கு ஒரு டான்ஸ் வேறு....(நம்ம பசங்கல்லாம் சூரியன் படத்துல கவுண்டமனி ஆடுன மாதிரி Start Music-னு சொன்னாங்க).

கடைசியில பார்த்திபனை ஒரு காமெடி பீஸ் ஆக்கியது தான் மிச்சம்.
அப்புறம் ஒரு மொக்கை போர்க் காட்சி... நிறைய இடங்களில் அங்கங்கே 300, troy, brave heart என்று சில சரித்திரப் படங்களில் உருவியிருக்கிறார்கள்....

கடைசியில் ஆண்ட்ரியாவை என்ன பண்றதுன்னு தெரியாம சும்மா உக்கார வச்சிருக்காங்க...

அப்புறம் ஒரு இனப்படுகொலை..கேட்டா இது ஈழப் பிரச்சனை இல்லை,சொந்தமா யோசிச்சு எடுத்தது-னு ஒரு பொய் வேற,

அதை விட கொடுமை...32 கோடியில ஹாலிவுட்-ல இதை எடுக்க முடியாதுன்னு ஒரு பேட்டி வேற...

எம்.ஜி.ஆர் காலத்துல மக்கள் ஆங்கிலப் படம் பார்க்குறதே அபூர்வம், அதனால காப்பி அடிச்சாலோ கண்டுபுடிக்குறது அபூர்வம். மணிரத்னம் கூட நாயகன் படத்துல உப்பு மூடை கட்டி கடத்துறத Sergio Leone-யோட "Once upon a time in America" -னு ஒரு படத்துல இருந்து சுட்டிருப்பாரு...அந்த படத்தோட theme music கேளுங்க....http://www.youtube.com/watch?v=Jj5Xczethmw சூப்பரா இருக்கும்.

அதெல்லாம் யாரும் கண்டுபுடிக்க முடியாத காலம் ஏமாத்துனீங்க..சரி... இப்போதான் எல்லாம் உலகமயம் ஆயிடுச்சே... ஹாலிவுட்-ல படம் ரிலீஸ் ஆகுற அன்னைக்கே இங்கயும் ரிலீஸ் ஆகுதே(அதுவும் தமிழில்..)

அப்புறம் எதுக்கு அதையே காப்பி அடிச்சு தமிழ்-ல எடுத்து நமக்கு காட்டனும்...!!!!!!!!!!!!!!!!!!!!

இப்போ உலகப்படங்கள் எல்லாமே Torrents-ஆ கிடைக்குதே... இரவு தூங்கும் முன்னாடி Download Start பண்ணினா போதும் காலையில் படம் ரெடி..

Within Tamilnadu it is Selvaragavan's film, but if it goes global then it represents our whole India or our tamil community within other states in India. அப்புறம் அவங்க சொல்லுவாங்க ...இந்த தமிழ்க்காரனுங்களுக்கு வேற வேலை இல்ல.நாம எடுத்ததையே நமக்கு திருப்பி எடுத்துக் காமிப்பானுங்கன்னு.

ராதாமோகன் எடுக்குறாரே அது ஒரு புதிய முயற்சி (Till someone proves he also copied from somewhere, I pray God that should not happen), அமீர் பருத்திவீரன் எடுத்தாரே, சுப்ரமணியபுரம் சசிகுமார்(eventhough there's violence in the movie, it got many fans).etc..etc...

செல்வராகவன்கிட்டேயும் இதை எதிர்பார்க்கிறோம்... கவர்ச்சிக்கும், படுக்கையறைக் காட்சிகளுக்குமென்றே நிறைய ஆங்கிலப் படங்கள் இருக்கிறது செல்வா, நீங்க தயவு செஞ்சு ஒரு நல்ல தமிழ் படமா எடுங்க..ப்ளீஸ்..

ம்ம்ம் ஒரு வழியா படம் முடிஞ்சு வெளிய வந்தா...அடுத்த காட்சிக்காக வெளியே தமிழ் சினிமா ரசிகர்கள் கூட்டம் வேற...செந்தில் ஒரு படத்துல கவுண்டமனிகிட்ட சொல்லுவாரே “அண்ணே அண்ணேனு சொல்ல வருது, ஆனா அடி வாங்குனேன்னு சொல்ல வரல”-ன்னு அது மாதிரி தான் அவங்களப் பார்த்ததும் உள்ள போக வேண்டாம்னு சொல்லத் தோணிச்சு ஆனா பேசவே முடியல..பின்ன உள்ள இப்படி எங்கள பயமுறுத்தி அனுப்புனா..

ம்ம்ம் கடைசியில தான் தெரிஞ்சது “சொந்த செலவுல சூன்யம் வச்சுக்கிறதுன்னு சொல்வாங்கல்ல அது இது தான்னு”,

Thursday, December 24, 2009

தோல்வியுற்ற கணம்.!!

எங்கிருந்தோ வந்து
சட்டென சுட்டு விடுகிறது, தோல்வி
அறிவிக்கப்படும் கணம் கோபத்தில் வந்து விழும்
ஒரு வார்த்தை...

அக்கணம் முதல் அறிந்ததில்லை
அவ்வளவு வீரியம் அந்த வார்த்தைக்கு உண்டென்று..!!

மிகக் குறைந்த நேரத்தில் சொல்லப்படும்
ஒரு சொல்லானது ஒரு மீட்க முடியாத
தொலைவில் உறவுகளைத் தொலைத்து விடுகிறது...

அந்த ஒரு கணம் உணர்த்துகிறது
மனம் சொற்களின் கட்டுப்பாட்டில் இருப்பதை..!!

என் தோல்விகள் அறிவிக்கப்பட்ட
நிமிடங்களைப் பத்திரமாய் சேகரிக்க விரும்புகிறேன்
என்றாவது ஒரு நாள் அவற்றை என் விருப்பம் போல்
வாழ்ந்து விட...

Monday, December 21, 2009

லெக் புல்லிங்..!! - 1

லெக் புல்லிங் பண்றதுக்கு பீரோ புல்லிங் மாதிரி கொஞ்ஜம் கவனம் தேவை...இல்லன்னா நம்ம லெக் காலி ஆயிடும்... அப்புறம் வடிவேலு மாதிரி
மல்லாக்க படுத்து விட்டத்த தான் பார்க்கனும்...இது நம்ம அன்றாட வாழ்க்கையில நடக்குறது தான்....சின்ன சின்ன பிட் பீஸ் தான் லெக் புல்லிங்... ஃபர்ஸ்ட் டாபிக்-னு தான் கொஞ்ஜம் பெரிய இண்ட்ரோ...பொறுத்துக்கோங்க...!!

முதல் புல்லிங் எங்க டீம் லீடர் ப்ரேம்-ல இருந்து ஆரம்பிப்போம்..!!
அவரு தான் அப்போ இல்ல இப்போ கூட இருக்குற ஒரே டைம் பாஸ். ;-)
எப்டியும் இதப் படிச்சுட்டு அவரு என்ன திரும்ப லெக் புல்லிங் பண்ணுவாரு, அரசியல்ல இதெல்லாம் சகஜம்-னு போறது தான நம்மோட பெருந்தன்மை..!!

அப்போ சென்னை டைடல் பார்க்-ல தான் ஆ(ப்)பீஸ்... விமல் புதுசா எங்க டீம்ல
சேர்ந்திருந்தான்..அவனும் டீம் லீடர் ப்ரேம் வீட்டு பக்கத்துலன்றதால, ஒன்னா தான் பைக்ல போவாங்க...பையன் வேலைக்கு சேர்ந்த புதுசுன்றதால ஆர்வக் கோளாரு, நிறைய கேள்வி கேட்டிருக்கான்...
மறுநாள் ஆ(ப்)பீஸ்ல...

ப்ரேம்: “இவன் எப்போ பார்த்தாலும் என் கிட்ட முட்டாள் தனமாவே கேள்வி கேட்குறான்டா.”

நான்: “உங்க கிட்ட அப்டி தான ப்ரேம் கேள்வி கேட்க முடியும்.”

கேட்ட மறுநொடி எங்க சீனியர் எஞ்ஜினியர் பாலா கொலைவெறியோட சிரிக்க, அடுத்த அரை மணி நேரம் ப்ரேம் கண்ணுல படாம எஸ்கேப்ப்ப்ப்ப்...தான்... :-)

புறக்கணிப்பு.!!



உன் நினைவுகள்
வறுத்தெடுத்த
உறக்கமில்லாத உக்கிரமான
இரவொன்றைக்
கடந்து வந்து முகம் கழுவுகையில்,
உதிர்ந்து,
ஓடும் தண்ணீருடன் கலந்து
மறைகின்றன
புறக்கணிப்பின் சில தடயங்கள்..!!


Sunday, December 20, 2009

இன்றைய இரவும்..!!






விளக்கணைத்து
போர்வைக்குள் என்னைப் புதைத்துக்
கொள்ளும்
இந்த இரவில் வந்து போகின்றன
சின்னச் சின்னதாய் சில ஞாபகங்கள்...

காலையிலிருந்தே நினைவில் கொண்டு
பின் தொலைபேசியில் அழைக்க முடியாமல் போன என் அம்மா
நெடுநாட்களுக்கு முன்னரே வாங்கி வைத்து, பின்
ஊருக்குப் போகும் நாளுக்காகக் காத்திருக்கும் என் அப்பாவிற்கான ஸ்வெட்டர்
நீண்ட காலம் தொடர்பில் இல்லாமல்
மின்னஞ்சலில் தொடர்பு கொண்ட தோழனுடனான கல்லூரி நாட்கள்
முறிவுற்ற காதலின் பிரிவுற்ற பொழுது
நிதானம் இல்லாமல் பிழை செய்த கணங்கள்
மறுநாள் முடிக்க வேண்டிய அலுவலகப் பணிகள்
இத்தினம் கட்ட முடியாமல் போன தொலைப்பேசிக் கட்டணம்
நிறுத்துகையில் கவனித்த என் மோட்டார் சைக்கிளின் எரிபொருள் அளவு
இன்னும் சில....என் மூளையில் பதிவிட...


வழக்கம் போலவே...

விடாது ஒலி எழுப்பியவாறு சுழலும்
மின் விசிறியின் சத்தத்தில் உறங்கித் தொலைக்கின்றேன்,
இயந்திரம் ஆகிவிட்ட வாழ்வின் இன்றைய இரவையும்...