Thursday, March 12, 2009

பிரிவின் வலி..!

உனக்கென்ன எளிதாய் சொல்லி விட்டாய்,
”முடிந்தால் அடுத்த பிறவியில் சேருவோம்” என்று..
என் உயிர் இப்போதே தவம் இருக்கத் தொடங்கி விட்டது,
என் மரணத்தை எதிர்பார்த்து..!!

நான் கண் மூடிய மறு நொடி
என் போர்வைக்குள் நீ வந்து விடுகிறாய்,
என் தூக்கமும், கனவுகளும்
வெளியேறி விடுகின்றன..!

நீ பிரிந்து செல்லும் வேளையில்
உன் துப்பட்டா நுணி பிடித்து
தொங்கிக் கொண்டு வரும் என் உயிரை
தெரு முனையில் உதறி விட்டுப் போய் விடு..
பாவம் அதற்கு உன்னையும், என்னையும் தவிர
வேறு எவரும் தெரியாது...!!


நம் இதயங்கள் உரசிக் கொண்ட
பின்னொரு நாளில் நம் உதடுகள்
உரசிக் கொண்டோம்..
நீ பிரிந்து சென்ற பின் உதடுகள்
உரசிக் கொள்ளாவிட்டாலும் நம் இதயங்கள்
உரசிக் கொள்வதை இன்னும் உணர்கிறேன்...

நாம் பரிமாறிக் கொண்ட
முத்தத்தின் ஈரம் காயும் முன்னே
என் கண்களை ஈரமாக்கிச்
சென்று விட்டாய்...உன் பிரிவால்...

உனக்கு என்னவெல்லாம் பிடிக்காது
என்பதை சொல்லிக் கொண்டே வந்தாய்,
திடீரென்று ‘நீயும் தான்’ என்று சொல்லி விட்டு
மறைந்து விட்டாய்... இப்போது உனக்கு
பிடிக்காத என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்...

1 comment:

Gowripriya said...

//நீ பிரிந்து செல்லும் வேளையில்
உன் துப்பட்டா நுணி பிடித்து
தொங்கிக் கொண்டு வரும் என் உயிரை
தெரு முனையில் உதறி விட்டுப் போய் விடு..
பாவம் அதற்கு உன்னையும், என்னையும் தவிர
வேறு எவரும் தெரியாது...!!//

கவிதை அழகு... குறிப்பிட்ட வரிகள் மிகவும் அழகு..