எங்கிருந்தோ வந்து
சட்டென சுட்டு விடுகிறது, தோல்வி
அறிவிக்கப்படும் கணம் கோபத்தில் வந்து விழும்
ஒரு வார்த்தை...
அக்கணம் முதல் அறிந்ததில்லை
அவ்வளவு வீரியம் அந்த வார்த்தைக்கு உண்டென்று..!!
மிகக் குறைந்த நேரத்தில் சொல்லப்படும்
ஒரு சொல்லானது ஒரு மீட்க முடியாத
தொலைவில் உறவுகளைத் தொலைத்து விடுகிறது...
அந்த ஒரு கணம் உணர்த்துகிறது
மனம் சொற்களின் கட்டுப்பாட்டில் இருப்பதை..!!
என் தோல்விகள் அறிவிக்கப்பட்ட
நிமிடங்களைப் பத்திரமாய் சேகரிக்க விரும்புகிறேன்
என்றாவது ஒரு நாள் அவற்றை என் விருப்பம் போல்
வாழ்ந்து விட...
Thursday, December 24, 2009
Monday, December 21, 2009
லெக் புல்லிங்..!! - 1
லெக் புல்லிங் பண்றதுக்கு பீரோ புல்லிங் மாதிரி கொஞ்ஜம் கவனம் தேவை...இல்லன்னா நம்ம லெக் காலி ஆயிடும்... அப்புறம் வடிவேலு மாதிரி
மல்லாக்க படுத்து விட்டத்த தான் பார்க்கனும்...இது நம்ம அன்றாட வாழ்க்கையில நடக்குறது தான்....சின்ன சின்ன பிட் பீஸ் தான் லெக் புல்லிங்... ஃபர்ஸ்ட் டாபிக்-னு தான் கொஞ்ஜம் பெரிய இண்ட்ரோ...பொறுத்துக்கோங்க...!!
முதல் புல்லிங் எங்க டீம் லீடர் ப்ரேம்-ல இருந்து ஆரம்பிப்போம்..!!
அவரு தான் அப்போ இல்ல இப்போ கூட இருக்குற ஒரே டைம் பாஸ். ;-)
எப்டியும் இதப் படிச்சுட்டு அவரு என்ன திரும்ப லெக் புல்லிங் பண்ணுவாரு, அரசியல்ல இதெல்லாம் சகஜம்-னு போறது தான நம்மோட பெருந்தன்மை..!!
அப்போ சென்னை டைடல் பார்க்-ல தான் ஆ(ப்)பீஸ்... விமல் புதுசா எங்க டீம்ல
சேர்ந்திருந்தான்..அவனும் டீம் லீடர் ப்ரேம் வீட்டு பக்கத்துலன்றதால, ஒன்னா தான் பைக்ல போவாங்க...பையன் வேலைக்கு சேர்ந்த புதுசுன்றதால ஆர்வக் கோளாரு, நிறைய கேள்வி கேட்டிருக்கான்...
மறுநாள் ஆ(ப்)பீஸ்ல...
ப்ரேம்: “இவன் எப்போ பார்த்தாலும் என் கிட்ட முட்டாள் தனமாவே கேள்வி கேட்குறான்டா.”
நான்: “உங்க கிட்ட அப்டி தான ப்ரேம் கேள்வி கேட்க முடியும்.”
கேட்ட மறுநொடி எங்க சீனியர் எஞ்ஜினியர் பாலா கொலைவெறியோட சிரிக்க, அடுத்த அரை மணி நேரம் ப்ரேம் கண்ணுல படாம எஸ்கேப்ப்ப்ப்ப்...தான்... :-)
மல்லாக்க படுத்து விட்டத்த தான் பார்க்கனும்...இது நம்ம அன்றாட வாழ்க்கையில நடக்குறது தான்....சின்ன சின்ன பிட் பீஸ் தான் லெக் புல்லிங்... ஃபர்ஸ்ட் டாபிக்-னு தான் கொஞ்ஜம் பெரிய இண்ட்ரோ...பொறுத்துக்கோங்க...!!
முதல் புல்லிங் எங்க டீம் லீடர் ப்ரேம்-ல இருந்து ஆரம்பிப்போம்..!!
அவரு தான் அப்போ இல்ல இப்போ கூட இருக்குற ஒரே டைம் பாஸ். ;-)
எப்டியும் இதப் படிச்சுட்டு அவரு என்ன திரும்ப லெக் புல்லிங் பண்ணுவாரு, அரசியல்ல இதெல்லாம் சகஜம்-னு போறது தான நம்மோட பெருந்தன்மை..!!
அப்போ சென்னை டைடல் பார்க்-ல தான் ஆ(ப்)பீஸ்... விமல் புதுசா எங்க டீம்ல
சேர்ந்திருந்தான்..அவனும் டீம் லீடர் ப்ரேம் வீட்டு பக்கத்துலன்றதால, ஒன்னா தான் பைக்ல போவாங்க...பையன் வேலைக்கு சேர்ந்த புதுசுன்றதால ஆர்வக் கோளாரு, நிறைய கேள்வி கேட்டிருக்கான்...
மறுநாள் ஆ(ப்)பீஸ்ல...
ப்ரேம்: “இவன் எப்போ பார்த்தாலும் என் கிட்ட முட்டாள் தனமாவே கேள்வி கேட்குறான்டா.”
நான்: “உங்க கிட்ட அப்டி தான ப்ரேம் கேள்வி கேட்க முடியும்.”
கேட்ட மறுநொடி எங்க சீனியர் எஞ்ஜினியர் பாலா கொலைவெறியோட சிரிக்க, அடுத்த அரை மணி நேரம் ப்ரேம் கண்ணுல படாம எஸ்கேப்ப்ப்ப்ப்...தான்... :-)
புறக்கணிப்பு.!!
Sunday, December 20, 2009
இன்றைய இரவும்..!!

விளக்கணைத்து
போர்வைக்குள் என்னைப் புதைத்துக்
கொள்ளும்
இந்த இரவில் வந்து போகின்றன
சின்னச் சின்னதாய் சில ஞாபகங்கள்...
காலையிலிருந்தே நினைவில் கொண்டு
பின் தொலைபேசியில் அழைக்க முடியாமல் போன என் அம்மா
நெடுநாட்களுக்கு முன்னரே வாங்கி வைத்து, பின்
ஊருக்குப் போகும் நாளுக்காகக் காத்திருக்கும் என் அப்பாவிற்கான ஸ்வெட்டர்
நீண்ட காலம் தொடர்பில் இல்லாமல்
மின்னஞ்சலில் தொடர்பு கொண்ட தோழனுடனான கல்லூரி நாட்கள்
முறிவுற்ற காதலின் பிரிவுற்ற பொழுது
நிதானம் இல்லாமல் பிழை செய்த கணங்கள்
மறுநாள் முடிக்க வேண்டிய அலுவலகப் பணிகள்
இத்தினம் கட்ட முடியாமல் போன தொலைப்பேசிக் கட்டணம்
நிறுத்துகையில் கவனித்த என் மோட்டார் சைக்கிளின் எரிபொருள் அளவு
இன்னும் சில....என் மூளையில் பதிவிட...
வழக்கம் போலவே...
விடாது ஒலி எழுப்பியவாறு சுழலும்
மின் விசிறியின் சத்தத்தில் உறங்கித் தொலைக்கின்றேன்,
இயந்திரம் ஆகிவிட்ட வாழ்வின் இன்றைய இரவையும்...
Friday, December 18, 2009
ஜஸ்ட் ஃபார் ஜோக்..!!
நண்பர்களே இது ஒரு ஜாலியான டைம்-பாஸ் பதிவு... கதைக்களம் முழுக்க முழுக்க என் சொந்தக் கற்பனையே...யாரையும் குறிப்பிடுவன அல்ல என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்... கண்டிப்பாக இது ஒரு நல்ல டைம்-பாஸ் தான் என்பதற்கு 2 years Warranty
கவுண்டமணி வெளியில் கிளம்பும் நேரம் பார்த்து செந்தில் எதிரே வருகிறார்
.
கவுண்டமணி: ஆஹா, சாதரணமா இவனப் பார்த்தாலே ஒன்னும் வெளங்காது. வெள்ளிக்கிழமை அதுவுமா இவனப் பார்த்துட்டோமே..!! என்ன ஆகப் போகுதோ...
செந்தில்: என்னண்ணே எங்கண்ணே கெளம்பிட்டீங்க...
கவுண்டமணி:டேய், உன்னப் பார்த்தாலே ஒன்னும் வெளங்காது. இதுல எங்க போறேன்னு வேற கேட்டுட்டியா, இனிமே போற காரியம் உருப்பட்ட மாதிரி தான்.
செந்தில்: அண்ணே சொல்லுங்கண்ணே...
கவுண்டமணி:ஆஆங்...கம்ப்யூட்டர் கத்துக்க...
செந்தில்: போங்கண்ணே வெளயாடதீங்கண்ணே...
கவுண்டமணி:ஆமா இவரு சுனில் கவாஸ்கரு, இவருகிட்ட நாங்க பந்து போட்டு வெளயாடப் போறோம்...நீயே ஒரு அரை டவுசரு...நான் உன்கிட்ட வெளயாடப்போறேனா...
செந்தில்: போங்கண்ணே நீங்க எப்பவுமே இப்டித்தான் வய்யிவீங்க..(செந்தில் சோகமாக ஒரு expression கொடுக்கிறார்.)
கவுண்டமணி: ஆமா...என்னடா அது தலையில, காக்கா ஆய் போடுச்சா..??
செந்தில்: அண்ணே இது ஹேர் கலரிங்ணே.
.
கவுண்டமணி:ஏண்டா டேய், அந்தா அந்த மொனையில இருக்குற சைக்கிள் கடையில இருந்து செயின் ஆயில் எடுத்து தலையில தேய்ச்சிட்டு வந்து ஹேர் கலரிங்னு பொய்யா சொல்ற...
செந்தில்: போங்கண்ணே நீங்க, எப்பவுமே இப்டித்தான் நான் ஹேர் கலரிங் பண்ணாலும் புடிக்காது, சந்தேகம் கேட்டாலும் புடிக்காது..
கவுண்டமணி: (கனத்த குரலில்) என்னடா உன் சந்தேகம்??
செந்தில்:ஏரோப்ளேன் எப்டிணே பறக்குது..
கவுண்டமணி: ஹஹ்ஹஹ்ஹ.... ஹஹ்ஹஹ்ஹ.......அதுவாடா மண்டையா ... அதுல 6 பெரிய டயர் இருக்குடா, அதுல ஸ்பீடா போய் அப்டியே பறந்து போய்டுது...
செந்தில்: அண்ணே பொய் சொல்லாதீங்கண்ணே...பஸ்-ல கூட தான் 6 டயர் இருக்கு...அது மட்டும் ஏண்ணே பறக்க மாட்டேங்குது...
கவுண்டமணி:(கடுப்பாக) உன்ன மாதிரி பன்னியல்லாம் ஏத்துனா எப்டிடா பறக்கும்....
செந்தில்: போங்கண்ணே என்றபடி சோகமாக தலையை குனிகிறார்....
கவுண்டமணி: டேய்...அதென்னடா கையில, நிரோத் டப்பாவா..
செந்தில்: புருட்டிணே....
கவுண்டமணி: என்னா டீ..???
செந்தில்: புருட்டீ...
கவுண்டமணி: இது எங்கடா வாங்குன..??
செந்தில்: இதுவாண்ணே...வரும் போது நம்ம அண்ணாச்சி கடைப் பக்கமா வந்தேனா, அவரு கடையில திரும்பி அரிசி எடுத்துகிட்டு இருந்தாரு, அப்டியே வெளில இருந்த புருட்டி டப்பாவ அவருக்கு தெரியாம எடுத்துட்டு வந்துட்டேண்ணே....(சொல்லிவிட்டு சிரிக்கிறார்)
கவுண்டமணி: அதான பார்த்தேன்...நீ காசு கொடுத்து வாங்குனா உலகம் அழிஞ்சுறாது....அத ஏண்டா கையில வச்சி நோண்டிக்கிட்டு இருக்க..?!?!
செந்தில்: அதுவாண்ணே, இத குடிச்சு முடிச்சிட்டு, வாயில வச்சி ஒரு ஊது ஊதி இப்டி டப்-புனு அடிச்சோம்னா...(சொல்லிக் கொண்டே செந்தில் கவுண்டமணி முகத்துக்கு நேராக frooti டப்பவை உடைத்து விடுகிறார். கவுண்டமணி முகமெல்லாம் frooti தெறிக்கிறது,)
கவுண்டமணி கடுப்பாக செந்திலைப் பார்க்கிறார்....
செந்தில்: இப்பதாண்ணே நீங்க கலர்ரா இருக்கீங்க..
கவுண்டமணி: ஏண்டா டப்பாவ மூஞ்சிக்கு நேரா உடச்சதும் இல்லாம, கலர்ரா இருக்கேன்னு நக்கலா பண்ற, ஒன்னய...என்றபடி கவுண்டமணி ஒரு கட்டையைத் தூக்கிக் கொண்டு செந்திலைத் துரத்துகிறார்.
செந்தில் அவரிடமிருந்து தப்பி தூரத்தில் நின்றபடி கவுண்டமணியைப் பார்த்து சிரிக்கிறார்.
கவுண்டமணி: படவா வா நீய்யி, உன்ன இந்தப் பக்கம் இனிமே பார்த்தேன் உன் மண்டைய கருக்கிபுடுறேன் கருக்கி.... என்றபடி கடுப்புடன் வீட்டிற்கு திரும்புகிறார்
கவுண்டமணி வெளியில் கிளம்பும் நேரம் பார்த்து செந்தில் எதிரே வருகிறார்
.
கவுண்டமணி: ஆஹா, சாதரணமா இவனப் பார்த்தாலே ஒன்னும் வெளங்காது. வெள்ளிக்கிழமை அதுவுமா இவனப் பார்த்துட்டோமே..!! என்ன ஆகப் போகுதோ...
செந்தில்: என்னண்ணே எங்கண்ணே கெளம்பிட்டீங்க...
கவுண்டமணி:டேய், உன்னப் பார்த்தாலே ஒன்னும் வெளங்காது. இதுல எங்க போறேன்னு வேற கேட்டுட்டியா, இனிமே போற காரியம் உருப்பட்ட மாதிரி தான்.
செந்தில்: அண்ணே சொல்லுங்கண்ணே...
கவுண்டமணி:ஆஆங்...கம்ப்யூட்டர் கத்துக்க...
செந்தில்: போங்கண்ணே வெளயாடதீங்கண்ணே...
கவுண்டமணி:ஆமா இவரு சுனில் கவாஸ்கரு, இவருகிட்ட நாங்க பந்து போட்டு வெளயாடப் போறோம்...நீயே ஒரு அரை டவுசரு...நான் உன்கிட்ட வெளயாடப்போறேனா...
செந்தில்: போங்கண்ணே நீங்க எப்பவுமே இப்டித்தான் வய்யிவீங்க..(செந்தில் சோகமாக ஒரு expression கொடுக்கிறார்.)
கவுண்டமணி: ஆமா...என்னடா அது தலையில, காக்கா ஆய் போடுச்சா..??
செந்தில்: அண்ணே இது ஹேர் கலரிங்ணே.
.
கவுண்டமணி:ஏண்டா டேய், அந்தா அந்த மொனையில இருக்குற சைக்கிள் கடையில இருந்து செயின் ஆயில் எடுத்து தலையில தேய்ச்சிட்டு வந்து ஹேர் கலரிங்னு பொய்யா சொல்ற...
செந்தில்: போங்கண்ணே நீங்க, எப்பவுமே இப்டித்தான் நான் ஹேர் கலரிங் பண்ணாலும் புடிக்காது, சந்தேகம் கேட்டாலும் புடிக்காது..
கவுண்டமணி: (கனத்த குரலில்) என்னடா உன் சந்தேகம்??
செந்தில்:ஏரோப்ளேன் எப்டிணே பறக்குது..
கவுண்டமணி: ஹஹ்ஹஹ்ஹ.... ஹஹ்ஹஹ்ஹ.......அதுவாடா மண்டையா ... அதுல 6 பெரிய டயர் இருக்குடா, அதுல ஸ்பீடா போய் அப்டியே பறந்து போய்டுது...
செந்தில்: அண்ணே பொய் சொல்லாதீங்கண்ணே...பஸ்-ல கூட தான் 6 டயர் இருக்கு...அது மட்டும் ஏண்ணே பறக்க மாட்டேங்குது...
கவுண்டமணி:(கடுப்பாக) உன்ன மாதிரி பன்னியல்லாம் ஏத்துனா எப்டிடா பறக்கும்....
செந்தில்: போங்கண்ணே என்றபடி சோகமாக தலையை குனிகிறார்....
கவுண்டமணி: டேய்...அதென்னடா கையில, நிரோத் டப்பாவா..
செந்தில்: புருட்டிணே....
கவுண்டமணி: என்னா டீ..???
செந்தில்: புருட்டீ...
கவுண்டமணி: இது எங்கடா வாங்குன..??
செந்தில்: இதுவாண்ணே...வரும் போது நம்ம அண்ணாச்சி கடைப் பக்கமா வந்தேனா, அவரு கடையில திரும்பி அரிசி எடுத்துகிட்டு இருந்தாரு, அப்டியே வெளில இருந்த புருட்டி டப்பாவ அவருக்கு தெரியாம எடுத்துட்டு வந்துட்டேண்ணே....(சொல்லிவிட்டு சிரிக்கிறார்)
கவுண்டமணி: அதான பார்த்தேன்...நீ காசு கொடுத்து வாங்குனா உலகம் அழிஞ்சுறாது....அத ஏண்டா கையில வச்சி நோண்டிக்கிட்டு இருக்க..?!?!
செந்தில்: அதுவாண்ணே, இத குடிச்சு முடிச்சிட்டு, வாயில வச்சி ஒரு ஊது ஊதி இப்டி டப்-புனு அடிச்சோம்னா...(சொல்லிக் கொண்டே செந்தில் கவுண்டமணி முகத்துக்கு நேராக frooti டப்பவை உடைத்து விடுகிறார். கவுண்டமணி முகமெல்லாம் frooti தெறிக்கிறது,)
கவுண்டமணி கடுப்பாக செந்திலைப் பார்க்கிறார்....
செந்தில்: இப்பதாண்ணே நீங்க கலர்ரா இருக்கீங்க..
கவுண்டமணி: ஏண்டா டப்பாவ மூஞ்சிக்கு நேரா உடச்சதும் இல்லாம, கலர்ரா இருக்கேன்னு நக்கலா பண்ற, ஒன்னய...என்றபடி கவுண்டமணி ஒரு கட்டையைத் தூக்கிக் கொண்டு செந்திலைத் துரத்துகிறார்.
செந்தில் அவரிடமிருந்து தப்பி தூரத்தில் நின்றபடி கவுண்டமணியைப் பார்த்து சிரிக்கிறார்.
கவுண்டமணி: படவா வா நீய்யி, உன்ன இந்தப் பக்கம் இனிமே பார்த்தேன் உன் மண்டைய கருக்கிபுடுறேன் கருக்கி.... என்றபடி கடுப்புடன் வீட்டிற்கு திரும்புகிறார்
Subscribe to:
Posts (Atom)

