Friday, August 29, 2008

உன் கால் பட்ட தேங்கிய
மழை நீரில் வானவில் வண்ணம்
தெரிகிறதெனப் பேசிக் கொள்கிறார்கள்,
நம் வீதி கடப்பவர்கள்...!!!
-------------------------------------------------------------

நீ காயப்போட்ட தாவணியில்
முந்தைய நாள் மழையில் ஒட்டிக்கொண்ட
மழைத் துளிகள், வெயில் ஏற, ஏற
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உன்
தாவணி நுனியில் தொங்கிக் கொண்டிருக்கின்றன...

No comments: