நீ என்னுடன் இல்லாத ஒரு விடுமுறை நாள்...
வழக்கத்தை விட தாமதாமாய் எழுந்தேன்
வாசலில் கிடந்த செய்தித்தாளை எடுக்க மனமில்லை
காலை உணவு உண்ண விருப்பமில்லை
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பிடிக்கவில்லை
கதவுகளை மூடிவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டேன்
மனம் கனமாய் இருந்தது
நினைவெல்லாம் நீ தான் நிறைந்திருந்தாய்
நீ இல்லாத வாழ்வு எவ்வளவு கொடுமை என்று சலித்துக் கொண்டேன்
அன்று இரவு சீக்கிரமே தூங்கி விட்டேன்
மறுநாள் விழிக்கையில் வீட்டில் உன் நடமாட்டம் கண்டு
என் அன்றாட வாழ்க்கை மறுபடியும் கிடைத்து விட்டதில் புன்னகைத்துக் கொண்டேன்
நீ வந்து விட்ட மகிழ்ச்சியில் சிறிது நேரம் நிம்மதியாய் உறங்கத் துவங்கினேன்.
No comments:
Post a Comment