Friday, May 30, 2008




இடம் பெயர்தல்
எல்லோர் வாழ்விலும் தவிர்க்க முடியாத
ஒன்றாக மாறிவிட்டது...


படிப்பதற்கோ, வேலை பார்ப்பதற்கோ
ஏதோ ஒரு மொழி தெரியாத ஊருக்கும்
நம்மை தயார்படுத்திக் கொள்கிறோம்..!!

அவ்வப்போது நம் குடும்பத்தினரை, நண்பர்களை

நினைத்து விட்டு நம் அன்றாட வேலைகளைத் தொடர்கிறோம்...

புதிய இடத்தில் சில வசதிக் குறைவுகள் இருந்தாலும்

நலம் விசாரிப்புகள் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது...

இடம்பெயர்தல் குற்றமில்லை...

ஆதி காலத்திலிருந்தே இடம்பெயர்தல் வழக்கத்தில் இருந்திருக்கிறது...

சில நேரங்களில் இடம்பெயர்தல் தண்டனைக்குரியதாய் தெரிகிறது...

காலத்தின் சக்கரங்கள் நம்மை எங்கெங்கோ

நகரச் செய்து விடுகின்றன...

காலத்தின் பயணத்தில் சேரும் இடம்

பயணிகளால் தீர்மானிக்கப்படுவதில்லை...

இதோ நானும் இடம்பெயரத் தயாராகி விட்டேன்...

என்னுடைய பயணமும் என்னால் தீர்மானிக்கப்படவில்லை...

வழித் துணைக்கு என்னுடன் எடுத்துச் செல்கிறேன்,

நாம் மகிழ்ச்சியாய் வாழ்ந்த நிமிடங்களின் நினைவுகளை...

No comments: