
வாழட்டும் எதிரிகள்..!!!
எதிரிகள் இல்லையெனில்
நமது பலம் உலகுக்கு தெரிவதில்லை...
கண்முன்னே வாழட்டும் எதிரிகள்,
ஒவ்வொரு வினாடியும்
நம்மை உயிர்த்தெழ வைக்க..!!
எத்தனை முறை விழுகின்றோமோ
அத்தனை முறை எழுவோம்....!!!
நாம் விழுவது வீழ்வதற்கல்ல,
மீண்டும் எழுவதற்கே,
தோல்விகளை மீண்டு வாழ்வதற்கே....!!!
உலகெல்லாம் நண்பர்கள் இருந்தால்
போர் புரிய முடியாது.
உலகெல்லாம் வாழட்டும் எதிரிகள்...
துணைக்குப் போரிட சில நண்பர்கள் மட்டும் போதும்....
உலகை வெல்வோம்...!!!
No comments:
Post a Comment