Thursday, July 2, 2009

பிரிவின் வலி.!!

நீ எவ்வளவு சண்டையிட்டாலும்,
திட்டினாலும் தாங்கிக் கொள்ளும்
மனது, உன்னுடைய சின்ன
மௌனத்தில்
உடைந்து நொறுங்கிப் போகிறது...

சில சமயாங்களில்
உன்னை இழந்து விட்டோம் என்று
தோன்றும் மனது மறுபடியும் தன்
இயல்புக்குத் திரும்பி உனக்காகக்
காத்திருக்கச் சொல்கிறது...

என் 24 மணி நேரத்துடன்
உன்னுடன் நான் இருந்த நிமிடங்களும்
சேர்ந்து கொண்டு என் நாட்களின் நீளத்தை
அதிகரித்து இன்னும் என்னை அதிகமாய் வாட்டுகின்றன...

மழை நின்ற பிறகு எந்தப் பற்றுதலும்
இல்லாமல் இலையின் நுனியில் தொங்கிக்
கொண்டிருக்கும் கடைசி மழைத்துளி போல
மனம் அவளின் நினைவுகளைக் கெட்டியாய்ப்
பிடித்த படி ஏதோவொரு நம்பிக்கையில்
வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறது...
என்னைப் போலவே நீயும்
நினைவுகளை அசை போடுவாய் என்ற ஒரு
சின்ன பேராசை அதற்கு...

நாள் முடிவில் உன்னிடம் இருந்து
எந்த செய்தியும் இல்லாமல் அந்த நாள்
மிகச்சாதாரணமாய் இறந்து போகிறது...
மறுநாள்...
தன்னைப் புதிதாய் பிரசவித்துக் கொண்டு என்னைத் துயரின்
இச்சைக்கு ஆளாக்கி விடுவதை வழக்கமாய்க் கொண்டுவிட்டது...
நானும் அதனுடனே வாழப் பழகிக் கொண்டிருக்கிறேன்...

இந்நாட்களில் தூக்கம் மட்டுமே
என் வலிக்கு தற்காலிக மருந்தாய் இருக்கிறது, ஆனால் அதுவும்
கிடைப்பது அரிதாய்ப் போனது...[like AB negative blood group ;)]

No comments: