நிலை மாற்றும் காதல்..
மழையில் நனைந்து சிலிர்த்துக்
கொண்ட பறவையின் சிறகாய் படபடக்கிறது மனம்
நீ அருகில் வந்தவுடன்.
பேசி விடத் துடிக்கும்
மனதிற்கு எப்போதும் ஒத்துழைப்பதில்லை
என் உதடுகள்.
நீ தற்செயலாய் உதிர்த்துச்
செல்லும் ஒற்றைப் பார்வையில்
உடைந்து சிதறுகிறது என் மனம் ஒரு ஆயிரம்
துண்டுகளாய்.
எந்நிலையில் இருப்போரையும்
தன் நிலை மறக்கச் செய்யும் காதலில்
என் நிலை மாறாமல் இருக்க நான் ஒன்றும் விதிவிலக்கல்ல..
மெதுவாய் சில மௌனங்கள்
மனதை ஆட்கொண்டு விட,
உன் நினைவுகளில் நடந்து கரைக்கின்றேன்
உறக்கம் இல்லாத இந்த இரவை….
No comments:
Post a Comment