
துளி துளியாய்...!!
உன் குடையில் இருந்த ஒரு
துளை வழியே உள்ளே நுழைந்து
உன்னை நனைத்து விட மழைத் துளிகளுக்குள் ஒரு போட்டி
நீ நான் என்று போட்டி போட்டு
ஒன்றையொன்று தள்ளி விட்டுக் கொண்டதில்
எதுவுமே உன்னை நனைக்கவில்லை
உன் வீடு வந்தவுடன் குடையை மடக்கி உதறி விட்டு
உள்ளே சென்றாய்...
பாவம் மழைத் துளிகள்
இன்னும் உன் வீட்டு வாசலிலேயே தவம் செய்கின்றன...!!!
உன் குடையில் இருந்த ஒரு
துளை வழியே உள்ளே நுழைந்து
உன்னை நனைத்து விட மழைத் துளிகளுக்குள் ஒரு போட்டி
நீ நான் என்று போட்டி போட்டு
ஒன்றையொன்று தள்ளி விட்டுக் கொண்டதில்
எதுவுமே உன்னை நனைக்கவில்லை
உன் வீடு வந்தவுடன் குடையை மடக்கி உதறி விட்டு
உள்ளே சென்றாய்...
பாவம் மழைத் துளிகள்
இன்னும் உன் வீட்டு வாசலிலேயே தவம் செய்கின்றன...!!!
No comments:
Post a Comment