Sunday, March 23, 2008


valentines day....

பூமிக்கு வலிக்குமோ என்று
வழக்கம்போல் மென்மையாய் நடந்து வந்த உன்னை
வேகமாய் நெருங்கினேன்.
"ஏன் இப்பிடி பண்ற நீ? கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு?' என்றேன்.
ஏதோ தவறு செய்துவிட்டோம் என்று பயந்து போய்
'என்ன ஆச்சு? நான் என்ன பண்ணேன்?' என்று
பதட்டமாய் கேட்டாய்.
"இன்னைக்கு என்ன day....valentines day....
பசங்க எல்லாம் ரோஸ் கிடைக்காம அலையுறாங்க..
இப்பிடி ஒரு bouquet-ஏ தனியா வந்தா சும்மா விடுவாங்களா!!
சீக்கிரமா வீட்டுக்கு போய் கதவ பூட்டிக்கோ' என்றேன் .
அவ்வளவு தான்.....கையில் இருந்த குடையை ஓங்கினாய் என்னை அடிக்க..... "விடு ஜூட்...."

No comments: