
வானவில் பெண்..!!!
மழை தூறும் அந்த மாலை வேளையில்
விரைந்து கொண்டிருக்கும் கருப்புக் குடைகளின் நடுவே,
கையில் கலர் குடையுடன் என் அருகில் நடந்து வந்தாய்....
"என்ன மழை பெய்யும் நேரத்தில்
வானவில்லை கையில் பிடித்திருக்கிறாய்" என்றேன்..
"என்னிடம் ஏதாவது சொல்லவில்லையெனில் உனக்கு தூக்கம் வராதே.." என்று சொன்னாய் சின்ன வெட்கத்துடன் ...!!
என்ன அதிசயம்...!!!
உன் கையில் இருந்த வானவில்
மெலிதாய் உன் முகத்தில் படரத் துவங்கியது...!!!!
மழை தூறும் அந்த மாலை வேளையில்
விரைந்து கொண்டிருக்கும் கருப்புக் குடைகளின் நடுவே,
கையில் கலர் குடையுடன் என் அருகில் நடந்து வந்தாய்....
"என்ன மழை பெய்யும் நேரத்தில்
வானவில்லை கையில் பிடித்திருக்கிறாய்" என்றேன்..
"என்னிடம் ஏதாவது சொல்லவில்லையெனில் உனக்கு தூக்கம் வராதே.." என்று சொன்னாய் சின்ன வெட்கத்துடன் ...!!
என்ன அதிசயம்...!!!
உன் கையில் இருந்த வானவில்
மெலிதாய் உன் முகத்தில் படரத் துவங்கியது...!!!!
No comments:
Post a Comment