Sunday, March 23, 2008


மழையின் கோபம்..!!!

உன்னை எப்படியும் நனைத்து விடும்
நோக்கத்தில் அந்த மழை
உன்னைத் துரத்திக்கொண்டே வந்தது..!!
நான் ஒதுங்கி நிற்பது கண்டு நீயும்
அந்த பேருந்து நிறுத்தத்தின் நிழற்க் குடையினுள்
நுழைந்து விட்டாய்..!!
நீ உன் குடையை மடக்க எத்தனிக்கையில்
அப்போது வீசிய பலத்த காற்றுடன்
உன் குடை அடித்துச் செல்லப்பட.....
உனக்குப் பிடித்த என்னை
அடிக்க முடியாத கோபத்தில் (!!) பாவம்...
தூரத்தில் உன் குடையை அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தது
அந்த மழை...!!!


No comments: