Sunday, March 23, 2008


ஊர் சுற்றும் காதல்...

இன்று உன்னைப் பற்றி ஒரு கவிதை
எழுதியே விடுவது என முடிவு செய்தேன்..!
என் அறையின் ஜன்னல் பகுதி தான்
சரியான இடம் என்று
paper பேனாவுடன் ஜன்னல் அருகில் அமர்ந்தேன்..
உனக்காக
காடு, மலை, கடல்,ஆறு,
park, beach, காஷ்மீர், ஊட்டி,
யாரும் இல்லா railway station,
நெடுஞ்சாலை tea கடை, bike ல் ஒரு long drive
எல்லாம் கனவிலேயே போய் திரும்பி விட்டேன்...!!
இன்னும் கவிதை வந்த பாடில்லை...
நீ மட்டும் தான் நினைவில் இருந்தாய்...!!
வேறென்ன யோசிக்கலாம் என்று நினைத்த போது
உள் மனது திடீரென்று கத்தியது , முட்டாளே..!
அவளே உன் நினைவில் இருக்கும் போது
உனக்கு கவிதை எதற்கென்று..!!
நியாயம் தான்.........
Paper பேனாவை தூக்கி எறிந்து விட்டு
உன் நினைவில் இருக்கத் தொடங்கி விட்டேன்..!!

No comments: